திருக்குறள்

817.

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும்.

திருக்குறள் 817

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால் பத்தடுத்த கோடி உறும்.

பொருள்:

சிரித்துப் பேசி நடிப்பவர்களின் நட்பைக் காட்டிலும் பகைவர்களால் ஏற்படும் துன்பம் பத்துக்கோடி மடங்கு நன்மையானது என்று கருதப்படும்.

மு.வரததாசனார் உரை:

(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை உடையவரின் நட்பை விட, பகைவரால் வருவன பத்துகோடி மடங்கு நன்மையாகும்.

சாலமன் பாப்பையா உரை:

சிரித்துச் செல்லும் இயல்பினராகிய நட்பைக் காட்டிலும், பகைவரால் வருவன பத்துக் கோடி மடங்கு நன்மையாம்.